ஏமாற்றம் மற்றும் விரக்தியால் தான் கிரிக்கெட்டிலிருந்து விலகவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில்  (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு விரக்தியும் ஏமாற்றமும் இல்லை. மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன். உடல் உபாதை காரணமாகவே இவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours