துறைநீலாவணைக் கிராமத்தின் சமூக முன்னோடிகளில் ஒருவரும் மத்தியவிளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினருமான அமரர் நாகேந்திரன் அவர்களது ஞாபகார்த்தக் கிண்ண மின்னொளியிலான கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு  9 ஆம்திகதி இன்று  புதன்கிழமை கழகத் தலைவர் ச.அரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது

இப்போட்டிக்கு அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பல விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, நாகேந்திரன் அவர்களது புதல்வர் ஓய்வுபெற்ற விஞ்ஞான வள நிலைய முகாமையாளர் நா.புள்ளநாயகம், ஆசிரியர் ஆ.சர்வேஸ்வரன்  ஊடகவியலாளரும்ஆசிரியருமான சா.நடனசபேசன்,ஆசிரியர் ச.தவேந்திரன் உட்பட கழக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours