காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை - மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
சிறப்பாக நடைபெற்றுவரும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா;

பாடசாலை மட்டத்தில் வினைத்திறனாக இரண்டாம் தவணைப் பரீட்சை நிறைவு பெற்று மாணவர்களின் அடைவுமட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ள வேளை பாடசாலை 3ம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு குழப்ப நிலையை ஏற்படுத்தும் நிலையில் வலயத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டாம் தவணையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் மன உழைச்சலுக்கு மத்தியில் சிறப்பான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையில் மட்டக்களப்பு கல்வி வலயம் பரீட்சைப் பகுப்பாய்வுகளை நடாத்தியமையை சங்கம் வன்மையாகக் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசிரியர்கள் பல சிரமத்தின் மத்தியில் மூன்றாம் தவணை பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியுள்ள வேளையில் பண்புசார் விருத்திக்கு முரணாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞான பரீட்சை வினாத்தாள்கள் இருந்ததாகவும் மேலும் மாணவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக பரீட்சையை மையமாகக் கொண்ட செயற்பாடுகளால் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தரம் 09, தரம் 10 மாணவர்களின் அடைவு மட்டத்துக்கான பரீட்சைகளை வலயம் ஒழுங்கு செய்துள்ளதாகவும் இதனால் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்புசார் விருத்திக்கு முரணாக தயாரிக்கப்பட்டுள்ள பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளமையால் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு முடியாமல் திண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அதிகாரிகளின் தூர நோக்கற்ற வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தரமான கல்விக்கான செயற்பாடுகளும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் சீர் குலைந்துள்ளதாகவும் மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்பண்புசார் விருத்திக்கு முரணான பரீட்சை வினாத்தாள் மூலம் வலயம் பெருந்தொகையான பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளமை நல்லாட்சிக்கான சவாலாக அமைந்துள்ளதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours