(எம்.ஏ.றமீஸ்)
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பாக மக்களை அறிவூட்டும் விஷேட செயலமர்வு  அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

ஆம்பாறை மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெறுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைகின்றது என்பது பற்றியும், இலஞ்சம் ஊழல்களை சமூக மட்டத்திலிருந்து எவ்வாறு ஒழித்தல் என்பது பற்றியதுமான தெளிவுரைகள் இதன்போது துறைசார் வளவாளர்களால் வழங்கப்பட்டன.

இதன்போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.சப்றி ஆகியோர் பிரதான வளவாளர்களாகக் கலந்து கொண்டு பல்வேறு செயன்முறைப் பயிற்சிகளையும் பங்குபற்றுநர்களுக்கு வழங்கினர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours