பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இதுவரை இருநூற்றி பத்து முறைப்பாடுகள் பதிவு!!
திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம்
இன்று அரோஹரா கோசத்துடன் யாழ். கதிர்காம பாதயாத்திரை யாழ். சந்நதியில் உணர்வு பூர்வமாக ஆரம்பம்! வழமைக்கு மாறாக அதிக அடியார்கள் பங்கேற்பு!!
அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார விபரங்கள் எடுத்துரைப்பு. பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம் விலாவாரியாக விளக்கினார் !
(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் நீரோடையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் களுவங்கேனி நீரோடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(27)காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேனி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராகிய மாரிமுத்து ராகினி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை(25) தனது மகனின் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல்போயிருந்த நிலையில், இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours