செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தரும் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த சிலர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து இளைஞர்கள் சிலரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையிலேயே இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இங்கு கூடியிருந்த இளைஞர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியான நியாயமான தேர்தல் சாய்ந்தமருதில் நடத்தப்பட வேண்டும், கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களை தாக்கிய குண்டர் குழுவை கைது செய்ய வேண்டும், தேர்தல் பிரசாரங்களின் போது அரச சொத்துக்களை பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours