பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தில் 27-12-2019 இன்று நடைபெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவானது காலை 9.30 மணியளவில் நாவிதன்வெளிப் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலாளர் ந.நவநீதராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக மாலையணிவித்து அதிதிகளை வரவேற்கும் முகமாக கோலாட்டம், பொல்லடி நிகழ்வின் போது அழைத்து வரப்பட்டார்கள்.
பிரதம அதிதிகளாக மாவட்ட உத்தியோகஸ்தர் வி.ஜெகதீஸ்சன் ,பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கணக்காளர் ஜனாப்.யு.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகஸ்தர் கி.யோகேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அம்பாரை ஜனாப் ரி.எம்.றிமசான், பிறை எப்.எம். நிலையக் கட்டுப்பாட்டாளர் ஜனாப்.அல்.ஹாஜ் பஸீர்.அப்துல்.கையூம் அவர்களும் கலந்து சிறப்பித்த்கார்கள்.
இந்நிகழ்வின் போது பிரதேச கலை மன்றங்களினால் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
அப்போது நாவிதன்வெளிப் பிரதேசத்தில் முதல் முறையாக நூல் வெளியீடு செய்த எழுத்தாளர் வை.கே.ராஜூ அவர்களுக்கு பாராட்டுதலும், பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள்.
இந்நிகவுகள் அனைத்தையும் நாவிதன்வெளிப் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எல்.எம்.ஸினாஸ் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத் தக்க விடயமாகும்
Post A Comment:
0 comments so far,add yours