மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
(காரைதீவு நிருபர் சகா)

குறித்த ஹொக்கி விளையாட்டின் மாவட்டமட்ட இறுதிப்போட்டி காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நேற்றுமுன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் அம்பாறை பிரதேசசெயலர் பிரிவும் காரைதீவு பிரதேசசெயலர் பிரிவும் மோதின.
போட்டி ஆரம்பித்து 8வது நிமிடத்தில் அம்பாறைஅணி ஒரு கோலைப் போட்டது. இருபக்கமும் விட்டுக்கொடாதவண்ணம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை போட்டிமுடிவடைய 2நிமிடமிருக்கையில் 58வது நிமிடத்தில் காரைதீவு அணி ஒரு கோலைப்போட்டு சமப்படுத்தியது.
அம்பாறை மாவட்ட விளையாட்டுஅதிகாரி எம்.எஸ்.அமீரலி முன்னிலையில் யாழ்.நடுவர்கள் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியைத்தீர்மானிப்பதற்கு தண்டனை உதை வழங்கப்பட்டது.
அதில் அம்பாறை அணி 5-2என்ற அடிப்படையிலும் காரைதீவு அணி 5-3என்ற அடிப்படையிலும் கோலைப்போட்டதால் காரைதீவு அணி வெற்றிவாகை சூடியது. வெற்றிக்கான கோலை அணிப்பொறுப்பாளர் தவராசா லவன் போட்டு அணியின்வெற்றிக்கு அடிகோலினார்.
காரைதீவு பிரதேசசெயலக அணிசார்பில் விளையாடிய ஹொக்கிலயன்ஸ் அணித்தலைவர் எஸ்.கேதீஸ்வரன் மாகாணமட்டத்தில் போட்டியிடுவதற்கான பயிற்சிகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours