கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் சு.திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் பிரியாவிடையுடன் பாராட்டு, கௌரவிப்பு நிகழ்வுகள்
தென்கிழக்குப் பல்கலையின் கலை கலாச்சார பீடத்தில் தங்கம் வென்ற வீரவதிக்கு வியக்கத்தக்க வரவேற்பு!
சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்
சந்திரன் குமணன் , ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் "திரியபியச"சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான மூன்று வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில் இடம் பெற்றது..
இம் மூன்று வீடுகளும் சமூர்த்தி லொத்தர் நிதியுதவியின் கீழ் ஒரு வீட்டிற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா செலவில், பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடுகள் குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, புளேக் ஜே மேற்கு ஆகிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட பயனாளிகளுக்கே இவ்வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம் பாரிஸ், கிராமஉத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours