தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சியே (குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு)
போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !
இலங்கையில் உயர் சர்வதேச கற்கைகள் நிறுவகம் (HIEI) "Fastest Growing Educational Institute of the Year" விருதைப் பெற்றுள்ளது.
கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்
சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு வர்த்தகர்கள் வழமை போல் கோவிட் -19 சட்ட விதிமுறைகளுக்கு அமைய தங்களது வியாபாரங்களை செய்யலாம். அதில் எவ்வித தயக்கங்களுமிருக்க தேவையில்லை. சாய்ந்தமருது கொரோனா செயலணி எடுத்த தீர்மானத்தை மாளிகைக்காடு மக்கள் கடைபிடிக்கவேண்டிய அவசியமில்லை என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர்
தெரிவித்தார்.
இன்று இரவு மாளிகைக்காடு பிரதேசத்தின் பிரதான வீதியில் உள்ள உணவகம் ஒன்றை மூட ஆயத்தங்களை செய்த போது அங்கு வருகை தந்த காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர், மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர் ஆகியோர் களத்தில் நின்று அந்நடவடிக்கையையை வெற்றிகரமாக முறியடித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாளிகைக்காடு பிரதேசத்திற்க்கு என தனியாக காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் தனியான சம்மாந்துறை பொலிஸ் பிரிவு என்பன உள்ள போது அடுத்த பிரதேச பிரிவினர் அத்துமீறுவது சட்ட விரோதமான செயலாகும்.
மாளிகைக்காடு பிரதேசத்தை சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்துவது தொடர்பில் யாரும் காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் என்பனவற்றுடன் கலந்துரையாடல் செய்யவில்லை. இங்கு மாளிகைக்காட்டில் நிறைய இயங்குநிலை சமூக சேவை அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் யாரிடமும் எவ்வித கலந்துரையாடலும் செய்யாமல் தான்தோன்றித்தனமாக சிலர் எடுத்த தீர்மானங்களை எப்படி நாங்கள் பின்பற்றுவது?
முகவரி இல்லா மொட்டைக்கடதாசிகளை நம்பி எங்களின் பிரதேசத்தின் வர்த்தகர்களை நாங்கள் பலியிட முடியாது. எங்களின் மாளிகைக்காட்டு மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இனியும் வழங்குவார்கள். இனியும் யாராவது இது விடயமாக முரண்பாடுகளுக்கு வந்தால் உடனடியாக மாளிகைக்காடு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருடன் தொடர்பு கொள்ளுங்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
Post A Comment:
0 comments so far,add yours