கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது!
உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!
அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு
இன்று திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதி முடக்கப்பட்டு, வீதிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உயிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours