கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !
திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்
யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு
(த.தவக்குமார்)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்குஇ பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்டிருந்த அழுகிய நிலையிலுள்ள மனித தலையொன்று வெள்ளிக்கிழமை(26) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கொலையச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து குறித்த நபர்களே மனித தலையொன்றினை கொண்டு சென்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்துஇ ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளதுடன் களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
குறித்த மனிததலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும்இ தோண்டி எடுக்கப்பட்ட தலை அதே பகுதியினைச் சேர்ந்த 83 வயதுடைய கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்னொருவருடைய தலையென இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிஸார் குறித்த மனிதத் தலைமை மீட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் (சொக்கோ) பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours