செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
( க.விஜயரெத்தினம்,சா.நடனசபேசன்)
மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும்,பிரபல சமூக சேவையாளரும்,இலக்கியவாதியுமான தராக்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(29)காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு.ஊடக அமையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நினைவுதினத்தில் முதலில் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து,16ஈகைச்சுடரேற்றப்பட்
இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன்,மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன்,அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராமிற்கு கொவிட் 19 சுகாதார நடமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தி நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours