(ஆ.நிதாகரன்) 

 உலகெங்கும் வாழும் இந்துக்கள்
இன்று(26) சித்திரா பௌர்ணமி விரதத்தை அனுஸ்டிக்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தரை எல்லோரும் வழிபடுவது வழக்கம். எமலோகத்தில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் கணக்கை எழுதி வைப்பவர் ‘சித்திரகுப்தர்’. இந்த கணக்கின் அடிப்படையில் தான் நமக்கு சொர்க்கம், நரகம் என்பது தீர்மானிக்கப்படுகிறது
 
 .இன்றைய நாளில் நாம் வழிபடும் ஒவ்வொரு விஷயமும் நம்முடைய புண்ணியங்களையும், பாவங்களையும் பற்றியதாக இருப்பது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருப்பீர்கள். அதற்கான மன்னிப்பு சித்திரகுப்தரிடம் கேட்டு விடுங்கள். வழிபாட்டின் பொழுது கட்டாயம் கொப்பி, பேனா ஒன்றை புதிதாக வாங்கி வைத்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொப்பி, பேனா வாங்கிக் கொடுப்பது, அன்னதானம் செய்வது, பச்சரிசி தானம் செய்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது.
 
உண்மையிலேயே சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். இவ்வுலகில் 13 வகையான சாபங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இருக்கும் பெரும்பாலான சாபங்கள் உங்களையும், அடுத்த அடுத்த சந்ததியினர் வரையும் வாழ விடவே செய்யாது. அத்தகைய பாவங்கள் நீங்க சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.
 

சித்ரா பௌர்ணமி வரலாறு

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் கொடுக்காதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் எனப் பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாகப் பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது தங்களுக்கு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.

இந்திரனின் அரன்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்கு குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் எடுத்துரைக்கஇ,எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்கு குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். அவர் சிதிரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் சித்திரா குப்தன் என அழைக்கப்படுகின்றார்.

 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours