இன்று சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற உலக கை சுகாதார தினம்
கடலில் நடக்கும் திருட்டை தடுக்கவும் - மருதூர் சதுக்கத்தில் ஒன்று கூடிய மீனவர்கள் !
விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
மாளிகைக்காடு முஸ்லிம் விவாக பதிவாளராக ரஹுபி பிர்தௌஸ் நியமனம் !
காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா வீதி பழைய வீதி காத்தாங்குடி-03 எனும் முகவரியை உடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஆதம் லெவ்வை பைறூஸ் என்பவர் தனது வீட்டில் நேற்று (25) தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்துள்ளனர்.
குறித்த நபர் காத்தாங்குடியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் களஞ்சியக்காப்பாளராக பணிபுரிந்து வந்ததாகவும் சம்பவ தினத்தன்று அவரின் முதல் மனைவியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே களுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours