(ஷமி மண்டூர்)

காத்தாங்குடிபொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளம் யுவதியான சுவிஸ்கிராமம் திரையாய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி வயது (21) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நம்பவம் நேற்று (21) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவருடன் ஆடைத்தொழிச்சாலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை குறுக்கிட்ட மற்றுமோர் மோட்டார் சைக்கிளை கண்டு அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக் வீதியில் வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (20) அன்று உயிரிழந்துள்ளதான விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours