(காரைதீவு   சகா)



நாட்டில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2இ500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
 
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நிதி அமைச்சின் செயலாளர் எஸ்இஆர். ஆட்டிகலவுக்கு அது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கான நிதி மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ஆரம்ப பாடசாலை ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் கல்விச்சேவை இராஜாங்க அமைச்சுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours