நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81 ஆயிரத்து 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 345 வாகனங்களில் வந்த 618 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours