வி.ரி.சகாதேவராஜா)

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும், சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் திருக்கோவில் பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

அறநெறிபாடசாலை மாணவர்களின்ஓங்காரம்,அஸ்ரோத்திரம்,பஜனை,பூசை நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

சிறப்புசொற்பொழிவினை ஆசிரிய ஆலோசகர் எஸ். லக்குணம் நிகழ்த்தினார். மற்றும் இந்து சமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ,மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனர்.
மேடையில்,  கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours