சமூக ஊடகங்கள் மூலமாக தற்போது மிகவும் பொய்யான மற்றும் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதால், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்(Sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக ஊடகங்கள் வழியாக தற்போது மிகவும் தவறான மற்றும் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். எனினும் இந்த சமூக ஊடகங்கள் சம்பந்தமான எவ்வித சட்ட வரையறைகளும் இல்லை. இளம் தலைமுறையினரின் பிரதான செய்தி ஊடகமாக சமூக ஊடகங்கள் உள்ளன.
இளம் தலைமுறையினர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதிலிருந்து விலகி இருக்கும் தரப்பினர். அவர்கள் தகவல்களைப் பெறும் பிரதான ஊடகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதை, நாட்டுக்கு கேடு விளைவிக்கும், நாட்டின் ஸ்திரத்தன்மை இல்லாமல் செய்யும் தரப்பினர் தமக்கான சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours