நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் "சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு" இன்று (15) வெள்ளிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹஸ்பி மற்றும் எம்.எஸ். இஸ்ரத் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ. தஸ்லிம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஆகியோரும், பிரதேச செயலக மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சுயதொழில் வழிகாட்டல் செயலமர்வு இதன்போது இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours