(க.விஜயரெத்தினம்)
எதிர்கட்சிகளின் பொய்யான பிரச்சாரங்களை தூக்கி வீசிவிட்டு அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ்மக்கள் மாற்றமடையுங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டு சில அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதன்கிழமை(13) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கித்துள் உறுகாமம் இணைப்புத் திட்டத்தினை பார்வையிட்டதுடன் விவசாயிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.
கித்துள்,உறுகாம குளங்களை இணைத்து நீர் கொள்ளளவினை அதிகரிப்பதன் மூலமாக கணிசமானளவு நீரை சேமித்து விவசாய காணிகளுக்கு தேவையான நீரை தங்குதடையின்றி போதியளவு விநியோகிப்பதற்கான திட்டத்தினையும்,அதற்கான கட்டுமான நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கான கள விஜயத்தினையே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட துறைசார் அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்...
எதிர்வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் வடகிழக்கில் தமிழ்மக்கள் அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தி அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.கடந்த யுத்தத்தினால் பல இழப்புக்களை சந்தித்த நீங்கள் உண்மையான அபிவிருத்தியை பெறவில்லை.தற்போது நாங்கள் வடகிழக்கை மையப்படுத்தியும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் துரிதமாக அபிவிருத்தி செய்து ,மக்களின் எண்ணங்களையும்,தேவைகளையும் கவனம் செலுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்கள் நிறைவேற்றி வருகின்றார்கள்.தற்போது நாட்டிலுள்ள மக்கள் அச்சமில்லாமல் நிம்மதியாகவும்,சமாதானமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கப்பட்டுள்ளது.எதிர்கட்
Post A Comment:
0 comments so far,add yours