(வி.ரி.சகாதேவராஜா)

கொரோனாத்தொற்று காணரமாக பாதிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் ஒருதொகுதி மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசளாருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இவ் உலருணவு நிவாரணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள வட்டிவெளி குண்டுமடு ஆகிய கிராமங்களின் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

பசிப்பிணி போக்கும் செயற்றிட்டத்தின் ஓரங்கமாக இந்நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கனடிய தமிழ் விளையாட்டுத்துறையின் கரப்பந்தாட்ட அணிகள் இவ்வுலருணவு நிவாரணங்களுக்கான அனுசரணை வழங்கியிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours