( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் உள்ள  20க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் 30மீற்றர் கொங்கிறீட் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

ஏலவே சுனாமியால் பாதிக்கப்பட்டு அண்மையில் மீள்புனருத்தாரணம் செய்யப்பட்டு விரைவில் மகா கும்பாபிசேகம் காணவிருக்கும் அருகிலுள்ள பாண்டிருப்பு விஸ்ணு ஆலயத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 ஆலயமுன்னாலுள்ள கொங்கிறீட்வீதி கடலினுள் அள்ளுண்டுள்ளது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்குச்சென்று ஆலய நிருவாகிகளுடன் கலந்துரையாடிதோடு கடலோரப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.அருணனிடன் இதுவிடயத்தை எத்திவைத்தார்.

குறித்த கடலோரப்பகுதியில் கல்அணை இடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உத்தியோகத்தர் அருணன் ,உறுப்பினர் ராஜனிடம் உறுதியளித்தார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில்  மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது.

இதனால் அப்பகுதியில்    போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் ஏலவே சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த  இப்பிரதேச மக்கள்  அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours