"கல்முனையில் சமய தீவிரவாதம்” என்ற குற்றச்சாட்டு : விளக்க அறிக்கை வெளியிட்டது கல்முனை பெரிய பள்ளிவாசல்
கல்முனை மாநகரில் நேற்று முத்து சப்புர நகர்வலம்
பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரவைப் பிள்ளையார் ஆலய மாம்பழத்திருவிழா; நாளை தீர்த்தம்
பொத்துவில் பிரதேச உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
( வி.ரி.சகாதேவராஜா)
இவ்வாறு சாய்ந்தமருதில் இடம்பெற்ற அறிமுகநிகழ்வில் உரையாற்றிய 'பென்கிளப்' ஸ்தாபிதத்தலைவர் கவிதாயினி மஷூறா ஏ மஜீட் தெரிவித்தார்.
பென்கிளப் அமைப்பு வெளியிடவிருக்கின்ற "சுட்டுவிரல்" கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா தொடர்பான முதல் அமர்வு சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமையன்று தலைவி மஷூறா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக உபதலைவியும் அல்ஹிலால் பிரதிஅதிபருமான கவிதாயினி முஜாமலா வரவேற்புரை நிகழ்த்த செயலாளர் கவிதாயினி வானம்பாடி றிப்காஅன்சார் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
அங்கு ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக், உதவிக்கல்விப்பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
அங்கு தலைவி மஷூறா மேலும் உரையாற்றுகையில்:
தற்போது உலகளாவியரீதியில் 145முஸ்லிம் பெண்எழுத்தாளர்கள் எமது அமைப்பில் உறுப்பினராகவுள்ளனர். முஸ்லிம் பெண் எழுத்தாளர்களது ஆற்றலுக்கான களங்களை களங்களை வியாபித்துக்கொள்ள வழிகாட்டுவது.கலாசாரத்தினூடாக கலையிலக்கியங்களைக் கட்டியெழுப்புவது.
இலைமறை காயாகவிருக்கும் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொண்டு வருவது.எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் அமைப்பினை வியாபிப்பது.
அவசியமான கலையிலக்கிய நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் தேர்ச்சியடையும் பொருட்டு பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்துவது.இஸ்லாத்தில் பெண் உரிமை பற்றிய அறிவை அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பேற்படுத்துவது.இலக்கியத்திற்கு மேலதிகமாக எதிர்காலத்திலா கவின்கலைகளின் வளர்ச்சிக்கும் உழைப்பது.
Post A Comment:
0 comments so far,add yours