( தாரிக் ஹஸன்)

சம்மாந்துறை  அல்-அமீர் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.சலீம் அவர்களின் அழைப்பில் பொதுஜனபெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா நேரடியாக பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலை குறைபாடுகள் தொடர்பில் பார்வையிட்டதுடன் அதிபர் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலிலும்  கலந்துகொண்டார். இதன்போது பாடசாலை அதிபரினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை பழைய  மாணவர் சங்க பிரதிநிதிகள், அபிவிருத்தி குழு பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours