( வி.ரி.சகாதேவராஜா)

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் ,முத்தமிழ்வித்தகர், இ.கி.மிசன் துறவி சுவாமி விபுலாநந்த அடிகளார் 1926இல் அதிபராயிருந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில், இராமகிருஸ்மிசன் ஸ்தாபகர்  வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரம்  நேற்றுமுன்தினம் கோலாகலமாக   நடைபெற்றது.


வைத்தீஷ்வரா கல்லூரி அதிபர்திருமதி வாசுகி தனபாலன் தலைமையில் விழா நடைபெற்றது.

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர்  ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ்,  மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் பிரசன்னமாயிருந்தனர்.

பிரதம அதிதியாக இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.

சுவாமிகளுக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வின் இடையிடையே வைத்தீஸ்வரா மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.

கடந்த வாரம், மலையகப்பயணத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்த சுவாமிகள் இந்த வாரம் வவுனியா மன்னார் நானாட்டான் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு சென்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours