வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்;ட கன்னன்குடா பிரதேசத்தில் 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான சிங்கரெத்தினம் குணபாலன் தனது வீட்டு அறையில் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அவரின் மனைவியுடன் நேற்று மாலை சண்டையிட்டதாகவும் அதனால் அவரின் மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றதாகவும் பின்னர் இன்று அதிகாலை வீட்டுக்கு சென்று தனவினை திறந்தபோது தனது கணவர் வீட்டினுள் தனக்குத்தானே தூக்கிட்டிருந்ததாகவும் அயலவர்களின் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டெடுத்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் ஏ.சி.றிஸ்வான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours