பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தெய்வீக அன்புச் சிறார்கள் நிகழ்ச்சி
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தெய்வீக அன்புச் சிறார்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் ஜனாப் பிர்ணாஸ் அவர்களின் தலைமையில் பொத்துவில் குண்டுமடு சிறிமுருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட சிவனருள் அறப்பணி மன்றத்தின் செயலாளர் வாமதேவன் இந்து சமய கலாசார உத்தியோகத்தர்களான கு. ஜெயராஜி,என்.பிரதாப் பொத்துவில் பிரதேசசெயலகத்தின் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.நிலேந்திரன் உட்பட அப்பிரதேச ஆலயங்களி தலைவர் செயலாளர் அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours