( அஸ்ஹர் இப்றாஹிம்)


"மிஹிந்து நிவாஹன" வேலைத்திட்டத்தின் கீழ் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் கும்புடுகுளிய கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன். இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா ,  இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த  ,  சனத் நிஷாந்த ஆகியோருடன் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours