இ.சுதா

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட துறைநீலாவணை வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கான முதியோர் சங்கத்தினை புனரமைத்து அரசாங்கத்தினால் உதவிகள் வழங்குவதற்கான பொதுக் கூட்டமானது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிராம உத்தியோகத்தர் கந்தசாமி சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வேலாயுதம் பத்மினி மற்றும் முதியோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு நடைபெற்றதுடன் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தரினால் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் மற்றும் எதிர் கால அபிவிருத்திகள் ,முதியோர் கெளரவிப்பு தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours