(ஷமி மண்டூர்)

பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் இன்று நண்பகல் 12 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்இ மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் உள்ள வாவியில் இருந்தே பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் வாவியில் இருந்து பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாளம் காண்பதற்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை அடையாளம் காணும் முகமாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours