நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுல் இன்று அதிகாலை யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள், வாயிற்கதவு மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகளின் அட்டகாசத்தினால் பிரதேச காணிகளில் உள்ள பயிர்கள் அதிகமாக சேதமாகியுள்ளதுடன் வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளனர்.மேலும் இரவு வேளைகளில் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த கிரமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வந்ததாக மக்கள் தெரிவித்தனர். யானைகள் கூட்டம் வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் கூட துவம்சம் செய்து சென்றுள்ளன. காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர். .
Post A Comment:
0 comments so far,add yours