(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மாஞ்சோலை சனசமூக நிலையத்தின் தலைவர் என்.எம்.றபாய்தீன் அவர்கள் தலைமையில் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் மாஞ்சோலை லெப்பை தம்பி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக  கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் ஏ.ஜீ.அமீர்,பிரதேச சபை உறுப்பினர்களான ,எம்.பி.ஜெளபர்,
எம்.பி.ஜெமிலா,ஏ.எல்.ஜெஸ்மீன் பீவி உட்பட கிராம அபிவிருத்தி சங்கத்தின்  தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours