(ஷமி மண்டூர்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பி வீதி செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சேகர்-நவராஜ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அண்மையில் திருமணம் முடித்து விட்டு வெளிநாடு சென்று பின்னர் வீடு திரும்பிய நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால் மனைவி அவரின் தாயாரின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் தனது வீட்டின் அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற்  பதில் நீதிவான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours