இ.சுதாகரன்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரோட்டரிக் கழகத்தின் திருகோணமலைக்கிளையின் ஏற்பாட்டில் பெறுமதியான நிழல்ப் பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் முதல்வர் சித்திரவேல் சசிதரன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (29)நடைபெற்றது.

நிகழ்வில் ரோட்டரிக்கழகத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் றொசன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ரோட்டரிக்கழகத்தினரால் பாடசாலை நிர்வாகத்தினரிடம் நிழல் பிரதி இயந்திரம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours