(காரைதீவு நிருபர் சகா)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டத்திற்கான ஆலயங்களில் பசுமை இலங்கை திட்ட ஆரம்ப நிகழ்வானது காரைதீவு ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் நேற்று (29). 
 காலை 09.18 சுப நேரத்தில் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்நிகழ்விற்கு திரு முன்னிலை அதிதியாக ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ மகேஸ்வரக்குருக்கள் கலந்துகொண்டார்.
 அதிதிகளாக சித்தானைக்குட்டி ஆலய தலைவர் பொ. பாலேந்திரா,
அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம்,செயலாளர் எஸ். நந்தேஸ்வரன், 
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா,உபதலைவர் கே.தட்சணாமூர்த்தி,பொருளாளர் ரி.தவக்குமார், ரி.உருத்திரன், ரி.யோகராஜா, ஆ.ரவீச்சந்திரன்,
இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் முன்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 ஏற்பாடுகளை மாவட்டசெயலக இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours