தேசிய சேமிப்பு வங்கியின் தலைவி திருமதி.கேசலா ஜெயவர்த்தன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று (16) காலை 7.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பொன்விழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
அதற்கு அமைவாக மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழா நிகழ்வுகள் கிளையின்
முகாமையாளர் பி.நிசானி தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவசொரூபன் பிரதம
அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிரேஸ்ட வாடிக்கையாளர்கள் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
அதிதிகள் வரவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசி உரையும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது வங்கியில் கணக்கை பேணிவரும் சிரேஸ்ட வாடிக்கையாளர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், இந் நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கி பொது முகாமையாளர் அஜித் டபில்யூ பீரிஸ், வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களும், தேசிய சேமிப்பு வங்கியின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours