சா.நடனசபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் நிதி உதவி மூலம் மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் திருமதி றோமிலா செங்கமலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி கல்லடியில்  இடம்பெற்றது.


 சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச்செயலாளராக இருத்து இறைபதம் அடைந்த திருமதி செல்வி மனோகர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லடி திருச்செந்தூர் மகளிர் ஒன்றியத்தினைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் திருமதி றோமிலா செங்கமலன், பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,உறுப்பினர் யுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு இப்பொதிகளை வழங்கிவைத்தனர்





















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours