—-
அம்பாரை மாவட்டம்,கல்முனை-14 நகரமண்டப வீதியைச் சேர்ந்த மீராசாஹிபு சலீம் அவர்கள் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.முகம்மட் றியாழ் முன்னிலையில் சமாதான நீதவானாக நேற்று (23/03/2022) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார் .
தற்போது கல்முனை மாநகரசபையில் வருமான பரிசோதகராக கடமையாற்றும் இவர் கல்முனை
அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்,கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவரும் ,சிறந்த சமூக சேவையாளருமான இவர் மர்ஹும் என்.மீராசாஹிபு எம்.இளையபிள்ளை ஆகியோரின் புதவல்வரும் ஆவார் .
Post A Comment:
0 comments so far,add yours