(அஸ்ஹர் இப்றாஹிம் )
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும் , பாலத்திற்கு அருகாமையிலும் குப்பைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது.
மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம் , ஹிஜ்ரா பள்ளிவாசல் போன்ற பல முக்கிய காரியாலயங்களும் , அரச நிறுவனங்களும் அமையப் பெற்றுள்ளன.
மக்களால் கொட்டப்படும் குப்பைகள் கல்முனை மாநகரசபையினால் அகற்றப்படாமையினாலேயே மாதக்கணக்கில் இக்குப்பைகள் குவிந்து கிடப்பதற்கு காரணமாகும்..
இந்த பகுதியில் மிருகங்களின் கழிவுகள் , வீட்டு கழிவுகள் என்பன வீசப்படுவதனால் கட்டாக்காலி மாடு , ஆடு , நாய் , புனை என்பனவற்றாலும் , காகம் , கோழி போன்ற பறவைகளினாலும் இக்குப்பைகள் பல இடங்களுக்கும் பரப்பப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பிரதேச மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours