(காரைதீவு சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளிஅம்பாள் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று(22) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
கும்பாபிசேக பிரதமகுரு சிவாச்சர்யதிலகம் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ,ஆலயத்தலைவர் சீ.சுப்பிரமணியம் முன்னிலையில் மஹா கும்பாபிசேக கிரியைகள் யாவும் நடைபெற்றுவருகிறது.
இம் மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழா நேற்றுமுன்தினம் 21ஆம்திகதி திங்கட்கிழமை வாஸ்துசாந்தி கணபதிஹோமம் உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியது.
Post A Comment:
0 comments so far,add yours