( தாரிக் ஹஸன்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குடபட்ட நெய்னாகாடு , பட்டம்பிட்டிய கிராமத்தில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்ட பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமது வீட்டுத் தேவைக்காக விறகு சேகரிக்க சென்ற வேளையில் றியாஸ் முஹம்மட் ஆசீக் (13வயது) முஹம்மட் இப்றாஹிம் (13வயது) என்ற
இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours