புதன்கிழமை (9) ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதோ பின்வருமாறு தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஸ இருந்தால்தான் ஆட்சியை முன்னொடுக்க முடியும் என்றவர்கள் இன்று எல்லா விடயத்திலும் தோல்வியடைந்திருக்கிறார். ஐனாதிபதி கடந்த காலங்களில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு பிரச்சினைகளை தீர்பதாக சொன்னாலும் இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. பிரச்சினைகளை தீர்ப்போம் தீர்ப்போம் என்று சொல்லும் நீங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டத்தினை மக்களுக்கு விளங்கப்படுத்துங்கள் எனவும் மக்களை ஏமாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறும் அரசாங்கத்தை எச்சரித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்களால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேறுங்கள் எனவும் இந்த அராஜக ஆட்சிக்கு எதிராக எதிர்வரும் 15 ம் திகதி ஜமச யினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours