இ.சுதா
தரம் 1மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வு பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் முதல்வர் சி.சசிதரன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் பு.திவிதரன் ,கெளரவ அதிதியாக பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் பா.துஸ்யந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கப்பிரதி நிதிகள் ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்கள் வரவேற்கப்பட்டு இனிப்புச் சுவைகளும் வழங்கப்பட்டன.இதன் போது பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours