ஆரையம்பதி இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த திறனாய்வு போட்டியில் விவேகானந்த இல்லம் 689 புள்ளிகளை பெற்று வருடாந்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது
சீரழிந்து வரும் காரைதீவு விபுலானந்தா மைதான பெவிலியன்!
சாய்ந்தமருதில் ஸகாத் வழங்கும் நிகழ்வு
சமய நூல்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்தியமைக்காக நிஸாம் காரியப்பர் நன்றி தெரிவிப்பு
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனை சந்தையும் - 2025
(காரைதீவு நிருபர் சகா)
எரிவாயுவைப் பெறுவதற்காக 16மணிநேரம் காத்திருந்து ஏமாந்து திரும்பியுள்ள துக்கமான சம்பவம் சனிக்கிழமையன்று காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் கடந்த இரண்டு நனி தினங்களில் எரிவாயு பொதுமக்களுக்கு சழங்கப்பட்டிருந்தது. அதுபோல நேற்றுமுன்தினம் சனிக்கிழமையும் வழங்கப்படும் என்ற சிந்தனையில் அதிகாலை 4மணிமுதல் மக்கள் சிலிண்டரோடு காத்திருந்தனர்.
நண்பகல் ஆகியும் உரிவாயு கிடைக்கவில்லை. எனினும் எரிபொருள் கிடைக்கும் என்ற நப்பாசையில் வெயிலிலும் மழையிலும் கால்கடுக்க காத்திருந்தனர்.
பிற்பகலில் அங்கு பிரதேச செயலாளர் தவிசாளர் ஆகியோர் மைதானத்திற்கு வேறு ஒரு நிகழ்விற்காக வருகைதந்திருந்தனர். காத்திருந்த மக்கள் அவர்களிடம் முறையிட்டனர். அவர்களோ அதற்கும் எமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று பதிலளித்தனர்.
எகிகும் மக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மாலை வரை காத்திருந்தனர் மாலை 6மணியளவில் சோவென மழை பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் வேறுவழியின்றி திட்டித்தீர்த்து கொள்கலன்களோடு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Post A Comment:
0 comments so far,add yours