மட்டு காத்தான்குடி பெரிஸ்பிரிவிற்குட்பட்ட இரு வேவ்வேறு விபத்துக்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த (17)ம் திகதி ஓந்தாச்சிமடப்பிரதேசத்தில் இருந்து உறவினர்களுடன் முச்சக்கர வண்டியில் மட்டக்களப்பை நேக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது ஆரையம்பதி பாலமுனைச்சந்தியில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கதிரமலை-ஜெயக்குமார் (61); மற்றும் மட்டக்களப்பில் இருந்து கல்லடிப்பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு கடந்த (21)ம் திகதி சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளுடன் மோதியல் படுகாயம் அடைந்து; சிகிச்சை பெற்று தோமஸ் ஜோன் (59) வந்த இருவரும்; சிகிச்சை பலனின்றி கடந்த (22)ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலங்களை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours