(காரைதீவு சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா எதிர்வரும் புதன்கிழமை 06.04.2022இல் நடைபெறவுள்ளது.அதற்கு முன்னதாக 4ஆம் திகதி திங்கட்கிழமையும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் அம்மனுக்கும் பரிவாரமூர்த்திகட்கும் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெறவிருக்கிறது.
கும்பாபிஷேக பிரதமகுருவாக ஆலயபிரதமகுருவும் கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரியாருமான சிவாகம வித்யாபூஷணம் சிவாச்சார்யதிலகம் பிரதிஸ்டாதிலகம் ஜோதிடவித்யாதத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் செயற்படுகிறார்.
நாளை 2ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு கர்மாரம்பத்துடன் கிரியைகள் யாவும் ஆரம்பமாகும். எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் திங்கள்(4)காலை 8மணி முதல் செவ்வாய்க்கிழமை(5) பி.ப.3மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய்யை ஆலயத்தில் விநியோகிக்க பரிபாலனசபை ஏற்பாடு செய்துள்ளது என ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு நிறைவுற்றகையோடு பி.பகல் 4மணியளவில் ஆலய முன்றலில் 1மணிநேர சூரசம்ஹாரம் காத்தவராயன் ஆகிய இரு வடமோடி நாட்டுக்கூத்துகள் நடைபெறவுள்ளன.
மறுநாள் மஹா கும்பாபிஷேகம் 6ஆம் திகதி புதன்கிழமை காலை 9.12மணிமுதல் 10.27மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.
ஆலயகுரு சிவஸ்ரீ ச.ஹோவர்த்ன சர்மா ஒழுங்கமைப்பில் சர்வசாதகராக ஆரியபாஷாவிற்பன்னர் சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்களும் பிரதிஸ்டா குருவாக கிரியாஜோதி சிவஸ்ரீ வே.யோகராசாக்குருக்களும் செயற்பட மகேஸ்வரபூஜையை கோ.ஜனபாலச்சந்திரன்(அவுஸ்திரேலி யா) வழங்கவுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours