சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்


சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா  பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானதுவெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.


அல்-உஸ்வா  பிலாண்டேசன் உரிமையாளர்  இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தலைமையில்இந்த மஞ்சள் அறுவடை இன்று(20) இடம் பெற்றது.


அல்-உஸ்வா  பிலாண்டேசன் வாளாகத்தில் மொத்தமாக எட்டு பாத்திகளில் பயிர்செய்கைசெய்யப்பட்டிருந்தது.அதில்  4000 கிலோ மஞ்சள்  றுவடையின் போது கிடைக்கப்பெற்றது.


இந்த அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையிலானகுழுவினர் ,சம்மாந்துறை விவசாய விரிவாக்கல்  நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீஎம் . நளீர்,சம்மாந்துறைபொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன என பலர் கலந்து கொண்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours