( காரைதீவு நிருபர் சகா)


 அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை நேற்றையதினம்(26) குறைந்து காணப்பட்டது.

 மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான கியுவரிசை இருக்கக் காணப்பட்டது.

 மக்கள் பலத்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள்.வாகன ஓட்டமும் குறைந்திருந்தது.

 ஆனால் நேற்றைய தினம் இந்த கியூவரிசை நன்றாக குறைந்து காணப்பட்டது.

நேற்று அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10 பேருக்கு உட்பட்டவர்களே நிற்க காணப்பட்டனர்.
தற்போது பெட்ரோல் டீசல் தாராளமாக  பெற்று வருகின்றார்கள்.
 டீசலுக்கான வரிசையும்  நன்றாக குறைந்துவிட்டது .
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours